இலக்கண குறிப்பை எளிய முறையில் கண்டறிய பயன்படும் முறைகள் பகுதி - 2
இலக்கண குறிப்பு
உம்மைத்தொகை:
1.இருசொற்களின் இறுதியில் "உம்" எனும் இடைசொல் மறைந்து வருவது உம்மைத்தொகை எனப்படும்.
2. இரு சொற்களும் ஒன்றோடுஒன்று தொடர்புடையதாக இருக்கும்.
3. எ. கா.தாய்சேய் (தாயும் சேயும்) என மறைந்து பொருள் தருகின்றன.
அன்மொழித்தொகை:
1. வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்கள் அல்லாத வேறு சொற்கள் மறைந்து வந்து பொருள் தருவது அன்மொழித்தொகை எனப்படும்.
2. எ.கா. சிவப்புச் சட்டை வந்தார்.
உருபும் பயனும் உடன்தொக்க தொகை:
1. இரு சொற்களின் இடையே ஒரு வேற்றுமைஉருபும் அதன் பொருளை உணர்த்தவரும் பயனிலையும் மறைந்து இருக்கும்.
2. எ.கா.தமிழ்த்தொண்டு (தமிழுக்குச் செய்யும் தொண்டு) இதில் "கு" எனும் நான்காம் வேற்றுமை உருபும் பயனும் மறைந்து வந்துள்ளது.
பெயெரெச்சம்:
1. முற்று பெறாத வினை, பெயர்ச்சொல்லை கொண்டு முடியும்.
2. சொல், "அ" அல்லது "உம்" என்னும் ஓசையில் முடியும்.
3. எ.கா. கேட்ட பாடல் -'கேட்ட' எனும் எச்சவினை 'பாடல்' எனும் பெயர்ச்சொல்லை கொண்டு முடிந்துள்ளது.
எதிர்மறை பெயரெச்சம்:
1. முதல் சொல் எதிர்மறை பொருளை உணர்த்தும் எச்சவினையாகவும், அடுத்தசொல் பெயர்ச்சொல்லாகவும் அமையும்.
2. முதல் சொல் 'அ' எனும் ஓசையில் முடியும். எ.கா. கேட்காத பாடல், தீராத வறுமை
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்:
1. முதல் சொல் எதிர்மறை பொருளை உணர்த்தும் எச்சவினையாகவும், அதன் இறுதி எழுத்து கெட்டும், அடுத்தசொல் பெயர்ச்சொல்லாகவும் இருக்கும்.
2. முதல் சொல் 'ஆ' எனும் ஓசையில் முடியும். எ.கா. கூடா நட்பு
வினையெச்சம்:
1.முற்று பெறாத வினை, வினைச்சொல்லை கொண்டு முடியும்.
2. முதல் சொல் பெரும்பாலும் "இ", “உ", “அ" எனும் ஓசையில் முடியும்.
3. எ.கா. வந்த பையன், பாடி மகிழ்ந்தனர், நடந்து சென்றான்.
எண்ணும்மை:
1. இருசொற்கள் ஒன்றோடுஒன்று தொடர்புடையதாகவும், “உம்" என்னும் சொல் வெளிப்படையாகவும் வரும்.
2. எ.கா. வண்ணமும், சுண்ணமும்
கண்ணும், கருத்தும்
முற்றும்மை:
1. சொற்கள் முழுமையாக தொகுக்கப்பட்டிருக்கும். “உம்" என்னும் எழுத்து சொல்லின் இறுதியில் வெளிப்படையாக வரும்.
2. எ.கா. அனைவரையும், யாவரையும்
வியங்கோள் வினைமுற்று:
1. ‘க',’ இய', ‘இயர்', ‘அல்' இவற்றுள் ஒன்றைக் கொண்டு முடியும்.
2. சில இடங்களில் "அ", “இ" என்றும் முடியும்.
3. வாழ்த்துதல், வைத்தல், வேண்டுதல், விதித்தல் என்னும் பொருள்களில் மரியாதை ஏவல் வினைமுற்றாக வரும். எ.கா. செய்க- க வாழி - இ வாழிய – இய வாழல் - அல்
அடுக்குத்தொடர்:
1. ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுத்தடுத்து அடுக்கி வரும்.
2. பிரித்தால் பொருள் தரும். எ.கா. வருக! வருக! வருக!
3. விரைவு, அச்சம், கோபம்,மகிழ்ச்சி, துன்பம் இவற்றுள் ஒரு பொருளை உணர்த்தும்.
இரட்டைக்கிளவி:
1. ஒரு சொல் இரண்டு முறை அடுத்தடுத்து வரும்.
2. பிரித்தால் பொருள் தராது.
3. எ.கா. கலகல, சலசல
உரிச்சொல்:
1. சால, உறு, தவ, நனி, கூர், கழி, மா, தட, க, மழ, குழ, தெவ், வை, கெழு - இவற்றிள் ஏதாவது ஒன்று பெயர்ச்சொல் அல்லது வினைச்சொல் முன் வரும்.
2. எ. கா. சாலச் சிறந்தது, மாமதுரை
உருவகம்:
1. உவமேயம் முன்னும் உவமை பின்னும் அமைந்து இருக்கும்.
2. “ஆகிய", "என்னும்" போன்ற சொற்கள் வெளிப்படையாகவோ, அல்லது மறைந்தோ வரும்.
3. எ.கா. கண்ணீர் வெள்ளம்
No comments