10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தாராபுரம் தாலுகாவில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வட்டாட்சியர் கிருஷ்ணவேணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தாராபுரம் தாலுகாவில் 9 கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர் 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
21 வயது பூர்த்தியாகி தாராபுரம் தாலுகா எல்லைக்குள் வசிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித் தகுதி, சான்றிதழ்கள் மற்றும் இதர சான்றிதழ்களை சுய சான்று ஒப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். ஆகஸ்ட் 1-ஆம் தேதி பிற்பகல் 5.45 மணிவரை விண்ணப்பங்கள் பெறப்படும். மேலும் விவரங்களுக்கு வட்டாட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

No comments

Popular Posts

Powered by Blogger.